_சாத்தானின் ஆயுதங்கள் | weapons of satan | tamil sermon outlines - Christian Short Sermons and Tamil Sermon Outlines

New Levels Ministries Official - We welcome to our site! We will be uploading Christian short sermons! Biblical Sermons! Bible studies! Motivational sermons! inspirational sermons! Bible theologies! Bible verses! Short inspirational sermons! Awakening sermons! bible doubt's! Biblical thoughts! Inspirational quotes! Today's bible verse! Tamil Sermon outlines! English sermon points! Sermon notes! Best Christian short sermons!

Breaking

.

.

Saturday 8 June 2024

_சாத்தானின் ஆயுதங்கள் | weapons of satan | tamil sermon outlines

 சாத்தானின் ஆயுதங்கள்





*_1. மனிதன் மனதைக் குருடாக்குவது_*

_2 கொரிந்தியர் 4 : 4_ 
_தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்._

_ஆதியில் பரலோகத்தில் அவனுக்கு உள்ள இடத்தை இழந்து போனவனே சாத்தான்.  பரலோக சிம்மாசனத்திற்கு ஆசைப்பட்டதால் வெட்டி வீழ்த்தப்பட்டவன்._ 
_(ஏசாயா 14 :12-15)_
_தேவனுக்கு எதிராக விழுந்து போன தூதர்களையும்  சேர்த்துக் கொண்டு  அவிசுவாசிகள் மனதை குருடாக்குகிறான்._


*_2.   அவன் கண்காணிக்கும் ஆயுதம்_*

_ஆதியாகமம் 3 : 15_
_(சர்ப்பம்) உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்;_ _அவர் (கர்த்தர் இயேசு) உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்._

_சாத்தான் நினைத்தது போல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரித்தாலும் அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார் என்பதை அவன் அறியவில்லை.  ஆதாம் காலத்திலிருந்து ஸ்திரீயையும வித்தையும்  ஆபிரகாம், மோசே, தாவீது முதல் தேடியும் தேவனின் ஆவிக்குரிய திட்டத்தை அறிய முடியவில்லை._


*_3. பிசாசிற்கு தரிசனங்களை காட்டவும் முடியும்.  இதுவும் ஒரு ஆயுதம்._*

_மத்தேயு 4 : 8- 9_
_மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:_
_நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்._

_ஏமாந்து விடக்கூடாது. சாத்தான் இயேசுதான் "வித்து"வா என கண்டறிய தந்திரம் செய்தான். இயேசு கிறிஸ்து பசியோடு இருந்ததால் கல்லை அப்பம் ஆக்க முடியுமா என ஆசைக் காட்டினான். ஆனாலும் கர்த்தர் ஞானமாகப் பேசினார்._


*_4. மாம்ச இச்சைகளை ஈர்க்க வைப்பதும் சாத்தானின் ஆயுதம்_*

_6 பேதுரு 2 : 11_ 
_பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகுங்கள்._


  *_5. கசப்பான வேர்களை நமக்குள் ஊடுருவச் செய்வதும் சாத்தானின் ஆயுதம்_*

_எபிரெயர் 12 : 15-16_
_ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,_
_ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்._


*_6. உலகப் பொருளின் மீது ஆசை உண்டாக்குவது,  இதுவும் ஒரு ஆயுதம்_*

_1 யோவான் 2 : 15-16_
_உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை._
_ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்._


*_7. கீழேயுள்ள இவைகளே அவனுடைய கடைசி ஆயுதம்_*

_கலாத்தியர் 5 : 19- 21_
_மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன:_ _விபசாரம்,_ _வேசித்தனம், அசுத்தம்,_ _காமவிகாரம்,_
_விக்கிரகாராதனை, பில்லிசூனியம்,_ _பகைகள், விரோதங்கள்,_ _வைராக்கியங்கள், கோபங்கள்,_ _சண்டைகள், பிரிவினைகள்,_ _மார்க்கபேதங்கள்,_
_பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே;_ _இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே_
_நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்._

_தேவ ஆவியின் துணையோடு பிசாசை எதிர்த்து நில்லுங்கள்._
_யார் தருகின்ற தரிசனம் என்றும், யாருடைய கட்டளை என்றும் பகுத்தறிந்துக் கொள்ளுங்கள். பகுத்தறியும் வரத்தை ஜெபத்திலே வேண்டி பெற்றுக்கொள்ளுங்கள்._
_கிறிஸ்து இயேசுவோடு நாம் கொண்டிருக்கும் ஐக்கியம், உறவினால் நலமானதை எளிதாக அறியலாம்._

*_நம்முடைய ஆயுதங்கள் என்ன?_*

_எபேசியர் 6: 11 - 13_
_நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்._
_மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு._
_ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்._

_என்ன சர்வ ஆயுதங்கள் என பார்ப்போம்._
_எபேசியர் 6: 14 -18_

No comments:

Post a Comment

Thank you for visiting our page.

Recent posts

.

Comments

recentcomments

.

.

Christian Short Sermons and Tamil Sermon Outlines
Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

Home Top

Post Top

Tags

Followers

New Levels Ministries

.

Translate

Wikipedia

Search results

Popular Posts

.

Pages