கிறிஸ்தவ ஐசுவரியவான்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? | Tamil sermons for Rich Pastors in the world, Tamil sermons outlines - Christian Short Sermons and Tamil Sermon Outlines

New Levels Ministries Official - We welcome to our site! We will be uploading Christian short sermons! Biblical Sermons! Bible studies! Motivational sermons! inspirational sermons! Bible theologies! Bible verses! Short inspirational sermons! Awakening sermons! bible doubt's! Biblical thoughts! Inspirational quotes! Today's bible verse! Tamil Sermon outlines! English sermon points! Sermon notes! Best Christian short sermons!

Breaking

.

.

Saturday 12 February 2022

கிறிஸ்தவ ஐசுவரியவான்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? | Tamil sermons for Rich Pastors in the world, Tamil sermons outlines


👉 _*கிறிஸ்தவ ஐசுவரியவான்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும்?*_



✍ இவ்வுலகத்திலே ஜசுவரியமுள்ளவர்கள் *இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும்,* நிலையற்ற *ஜசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும்,* நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற *ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,*

                   1 தீமோத்.6:17

*நன்மைசெய்யவும்,* *நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,*

                   1 தீமோத்.6:18

நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி *வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும்* அவர்களுக்குக் கட்டளையிடு. 

                   1 தீமோத்.6:19


என்று இளம் ஊழியர் தீமோத்தேயுவுக்கு அப். பவுல் தரும் ஆலோசனையை கவனியுங்கள்.


அதன் அடிப்படையில் இவ்வுலகத்தில்  ஐசுவரியமுள்ளவர்கள்:


1⃣ இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாய் இருக்கக்கூடாது. (1தீமோத்.6:17)


ஐசுவரியம் இருக்கிற இடத்தில் இறுமாப்பு இருக்க அதிக வாய்ப்பு உண்டு!


ஐசுவரிய இறுமாப்பு

சபையில் முக்கியமான பதவி, விசேஷித்த மரியாதை இவைகளை எதிர்ப்பார்க்கத் தூண்டும்! (யாக்.2:2,3)


இல்லாத ஏழை விசுவாசிகளை அசட்டைப்பண்ணச் சொல்லும்!

(1கொரி 11:21,22)


பொன் மோதிரம், மிணுக்கு வஸ்திரம், விசேஷித்த ஆகாரம் என்று தன் ஐசுவரிய பெருமையை வெளிப்படுத்த ஆவலாய் இருக்கும்!

(யாக்.2:2,3, 1கொரி 11:21)


ஐசுவரியவான்கள் இவ்வித காரியங்களுக்கு விலகித் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.


ஊழியக்காரர்கள், ஐசுவரியவான்களை ஒருவிதமாகவும், ஏழை விசுவாசிகளை ஒருவிதமாகவும் நடத்தக்கூடாது என்று அப் யாக்கோபு கண்டிக்கிறார்.

(யாக் 2:1 - 6)


பசியுள்ள ஏழை விசுவாசிகளின்மேல் கரிசணையற்ற பணக்கார விசுவாசிகள், அவர்களை அசட்டைப்பண்ணுகிறதை அப் பவுல் சகித்துக்கொள்ளமுடியாது என்கிறார்!

(1கொரி 11:20-22)


 *ஏழை விசுவாசிகளை பணக்கார விசுவாசிகள் அசட்டைப்பண்ண  சபையில் ஊழியர்கள் இடந்தரக்கூடாது!*


😁 ஐசுவரியவான்கள் சபைக்கு வந்துவிட்டால் சில ஊழியக்காரர்கள் அவர்களுக்கு எடுபிடிகளாக மாறிவிடுகிறது அருவருப்பாயிருக்கிறது!


2⃣ நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வைக்கக்கூடாது. (1தீமோத்.6:17)


😊 அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: *ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.* 

                    லூக்கா 12:16

அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் *சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே,* 

                    லூக்கா 12:17

நான் ஒன்று செய்வேன், *என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி,* எனக்கு விளைந்த தானியத்தையம் என் பொருள்களையும் *அங்கே சேர்த்துவைத்து,* 

                    லூக்கா 12:18

பின்பு: ஆத்துமாவே, *உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது,* நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். 

                    லூக்கா 12:19

தேவனோ அவனை நோக்கி: *மதிகேடனே,* உன் ஆத்துமா(நீ) உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது *நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்* என்றார். 

                    லூக்கா 12:20

 *தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன்* இப்படியே இருக்கிறான் என்றார். 

                    லூக்கா 12:21


அதிகம் சேர்த்துவைத்துவிட்டால் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிடலாம் என்று இங்கு ஒருவன் நம்புகிறான்!


அநேக வருஷங்களுக்கு அநேக பொருட்கள் சேர்த்துவைத்துவிட்டால், பாதுகாப்பாக இருந்துவிடலாம் என்று இவன் நம்புகிறான்.


பூமிக்குரிய ஐசுவரியத்தை்கொண்டு ஒருவனும் தன்னை திருப்திப்படுத்திவிட முடியாது!



 *கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது;* நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.

                             நீதி.11:4


என்கிறார் ஐசுவரியவான் சாலொமோன்.


😊 *ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்.* ஏனெனில் *அவன் புல்லின் பூவைப்போல்* ஒழிந்துபோவான். 

                            யாக்.1:10

சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம். *ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான்.*

                            யாக்.1:11


என்கிறார் அப் யாக்கோபு.


கொடுமையை நம்பாதிருங்கள், கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள், *ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்.* 

                   சங்கீதம் 62:10


என்கிறார் ஐசுவரியவான் தாவீது.


3⃣ ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவேண்டும். (1தீமோத்.6:17)


நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிறவர் அவரே!


கொடுக்கப்பட்டவைகள்மேல் அல்ல, கொடுத்தவர்மேலேயே நம்பிக்கை வைக்கவேண்டும்.


ஐசுவரியம் நிலையற்றது. அது  அழியும், ஆனால் அதைக் கொடுக்கிறவர் என்றைக்கும் மாறாதவர்! 

(யாத்.3:14, எபிரே.13:8)


அவர்மேல் நம்பிக்கைவைத்தால் திரும்ப ஐசுவரியத்தை சம்பாதிக்கிறதற்கான பெலனை கொடுப்பார்.

(உபாக.8:18)


சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள், *நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.* 

                     சங்கீதம் 20:7

அவர்கள் முறிந்து விழுந்தார்கள், *நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.* 

                     சங்கீதம் 20:8


என்று தேவனை நம்புவோர் கெம்பீரிக்கலாம்!


4⃣ நன்மைசெய்யவேண்டும். (1தீமோ 6:18)


செல்வத்தில் ஐசுவரியவான்களாய் இருக்கிறவர்கள், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவேண்டும்!


*தாராளமாய்க்* கொடுக்கிறவர்களும், *உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்* வேண்டும்.


 *ஒரு கிறிஸ்தவ ஐசுவரியவானின் செல்வம் அவனுக்கு மட்டுமே உரியது அல்ல!* 


அதில் *ஊழியருக்கும்* (கலாத்.6:6), *சக விசுவாசிகளுக்கும்* (6:10), *அந்நியருக்கும்* (ரோமர்12:13), *சத்துருக்களுக்கும்*

(12:20), *விதவைகள்* மற்றும் *திக்கற்றப் பிற்ளைகளுக்கும்* (யாக்.1:27), *பிச்சைக்காரருக்கும்* (லூக்கா12:33) பங்குண்டு!


😊 விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் *ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள்.* ஒருவனாகிலும் *தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை,* சகலமும் அவர்களுக்குப் *பொதுவாயிருந்தது.* 

                      அப் 4:32

நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, *விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,*

                      அப் 4:34

அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். *அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது.* அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை. 

                      அப் 4:35


ஆதிசபையில் இருக்கிறவர்கள், இல்லாதவர்களின் தேவைக்குத்தக்கதாக கொடுத்து, பொருளாதாரத்தில் ஒரு சமநிலையை உண்டாக்கினார்கள்!


 *செழிப்பின் உபதேசிகள்:  இருக்கிறவர்கள் இல்லாதோர்க்குக் கொடுக்க போதியாமல், தங்களை ஐசுவரியவான்களாக்க நேரடியாக தேவனிடம் கேட்கும்படி போதிக்கிறார்கள்!* 


*"தங்கள் ஐசுவரியம் தாங்கள் அநுபவிக்க மட்டுமே"* என்கிறவர்கள் *பரலோக ஐசுவரியத்தை இழந்துப்போவார்கள்!* (லூக்கா12:15-21, 16:19,23-25)


தாராளமாய்க் கொடுப்பதில் ஐசுவரியமுள்ள கிறிஸ்தவரே உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவேண்டும்!


5⃣  வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக சேர்த்துவைக்கவேண்டும். (1தீமோத்.6:19)


 *வருங்காலம் நமக்கு பரலோகத்தில்தான்!* 


*நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது,* அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். 

                         பிலி 3:20


 *நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை.* வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம். 

                       எபிரே 13:14


நிலையான பரம எருசலேம் நகரில் குடிப்போக விரும்புவோர், அங்கே தங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்க்கவேண்டும்.


உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப்பிச்சைகொடுங்கள், *பழமையாய்ப்போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள்,* அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை. 

                    லூக்கா 12:33


 *நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி,* அநீதியான *உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.*

                      லூக்கா 16:9


என்று ஆலோசனைச் சொல்லுகிறார் கிறிஸ்து இயேசு.


"நித்திய ஜீவனை அடைகிறதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும்" (மத்.19:16) என்று கேட்ட ஐசுவரியவானிடம்:


நீ போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, *அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்,* பின்பு என்னைப் பின்பற்றிவா

                   மத்தேயு 19:21


என்று சொன்னார் நம் கர்த்தர் இயேசு.


 *பரலோகம் போக விரும்புவோர், அங்கே தங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்க்கவேண்டும்!* 


நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி பரலோகத்தில் பொக்கிஷம் சேர்க்க விரும்புவோர், தங்கள் பூமியின் பொக்கிஷங்களை ஏழைகளுக்காய் கரைக்கவேண்டும்.


6⃣ பரலோக பொக்கிஷங்களுக்காய் பூமியின் பொக்கிஷங்களைத் துறக்க ஆயத்தமாயிருக்கவேண்டும்.


அதற்கு கர்த்தர் இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், *உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்,* பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.


மத்தேயு 19:21

*அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது,* துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான். 

                   மத்தேயு 19:22


பரலோகத்திற்காய் பூமியை இழக்க அவனுக்கு மனதில்லை!


அப்பொழுது, கர்த்தர் இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: *ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று,* மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 

                   மத்தேயு 19:23

மேலும் *ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும்,* ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 

                   மத்தேயு 19:24


 *பரலோக பொக்கிஷத்தைவிட பூமியின் பொக்கிஷங்களை  பெரிதாய் எண்ணுகிறவன், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க வாய்ப்பில்லை!* 


பூமியிலே தனக்கு எவ்வளவோ சேர்த்திருந்தும்,  *பரலோகத்தில் ஒரு சொட்டுத் தண்ணீர்க்கூட* சேர்த்துவைக்காத ஒரு பரிதாபமான ஐசுவரியவானைப் கர்த்தர் சொன்ன உவமையில்  பார்க்கமுடிகிறது! (லூக்கா16:24)


பரலோகத்தில் பெற்றுக்கொள்ள விரும்புவோர், பூமியில் தேவசித்தமானால் விட்டுவிட ஆயத்தமாய் இருக்கவேண்டும்!


*நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும்,* நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, *கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,* 

                           பிலி 3:9

இப்படி நான் அவரையும் *அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும்,* அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், *அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடேழுந்திருப்பதற்குத் தகுதியாயிருக்கும்படிக்கும்,* 

                         பிலி 3:10

 *அவருக்காக எல்லாவற்றையும்* நஷ்டமென்று *விட்டேன்.* குப்பையுமாக *எண்ணுகிறேன்.* 

                         பிலிப்.3:11

 

என்கிறார் அப் பவுல்.


விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது *பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து,* 

                     எபி 11:24

 *அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும்* தேவனுடைய ஜனங்களோடேதுன்பத்தை அநுபவிப்பதையே *தெரிந்துகொண்டு,* 

                      எபி 11:25

 *இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து,* *எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும்* கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். 

                      எபி 11:26

 *விசுவாசத்தினாலே அவன்* அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல *உறுதியாயிருந்து,* ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் *எகிப்தைவிட்டுப் போனான்.* 

                      எபி 11:27


பூமியை விட்டுவிட மனமில்லாதவன் பரலோகத்தைப் பற்றிக்கொள்ள முடியாது!!


 _எழும்பி பிரகாசி_ 🔥

No comments:

Post a Comment

Thank you for visiting our page.

Recent posts

.

Comments

recentcomments

.

.

Christian Short Sermons and Tamil Sermon Outlines
Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

Home Top

Post Top

Tags

Followers

New Levels Ministries

.

Translate

Wikipedia

Search results

Popular Posts

.

Pages